- விடியலுக்கு முன் 3 மணி முதல் 6 மணி வரை பிரம்ம முகூர்த்தம்.
- அதிகாலை 6 மணி முதல் 7 மணி வரை தேவர்கள் காலம்.
- முற்பகல் 9 மணி முதல் 12 மணிவரை ரிஷிகளின் காலம்.
- நண்பகல் 12 மணி முதல் 3 மணி வரை பிதுர்க்களின் காலம்.
- பிற்பகல் 3 மணி முதல் 6 மணிவரை சந்தியா காலம்.
- முன் இரவு 6 மணி முதல் 9 வரை பூத காலம். நடு இரவு 9 மணி முதல் 12 மணி வரை பிரேத காலம்.
- பின் இரவு 12 மணி முதல் 3 மணிவரை ராட்சச காலம்
- இதில் பிரம்ம முகூர்த்த காலத்தில் யாவற்று சுபகாரியங்களும் திதி, நட்சத்திரம் , சரியில்லாவிட்டாலும் செய்யலாம்.
- உதய காலம் தேவர்களுடையதால் வேளையும், நட்சத்திரமும் உகந்ததாய் இருக்க வேண்டும்.
- ரிஷிகளின் காலத்தில் நற்காரியங்கள் செய்ய நல்ல ஓரை, திதி, நட்சத்திரம், வேளை அடுத்தபடியாகவும் தேர்ந்து செய்ய வேண்டும்.
- பிதுர்க்களின் காலத்தில் திதியினை பிரதானமாகவும் , நட்சத்திரத்தை அடுத்தபடியாகவும் தேர்வு செய்ய வேண்டும்.
- சந்தியா காலத்தில் மனித விருப்பங்கள், கேளிக்கைகள் போன்ற எக்காரியமும் செய்யாது, இறை வழிபாட்டிற்கும், ஜெபம், தவம், போன்றவற்றை மட்டுமே செய்ய வேண்டும்.
- மற்ற காலங்களில் எந்த சுப காரியமும் கூடாது.