ஏனெனில் ஒருவரின் ஜாதகத்தில் சனி நின்ற பாவம் சோதனைகளுக்கு உள்ளாகும், அந்த பாவத்தின் உயிர்காரக உறவுகளின் உத்திரவுக்காக ஜாதகர் தயங்கி நிற்பார், இது ராமனின் ஜாதகத்திலும் உள்ளதே.
ராமனின் ஜாதகத்தில் தாய் ஸ்தானத்தில் 4ல் சனி, ஆகவே தான் ராமர் தாயின் உத்திரவுக்காக காத்திருக்க நேர்ந்தது. அதே தாய் அவரை காட்டுக்கும் அனுப்பிவைத்தார். சனி நின்ற வீட்டில் ஜாதகர் எதிர்கொள்ளும் தோல்விகளும்/மனம் வருந்தத்தக்க நிகழ்வுகளும் அவரவரின் முன்வினை பயன் என்பதை புரிந்துகொண்டு அமைதியாக இருந்தால் அதே பாவத்தில் ஏற்றங்களை கொடுப்பார் சனி.
உதாரணமாக: என் ஜாதகத்தில் 7ல் சனி, 10க்கு 10ம் வீடு 7ம் வீடு. ஆக நான் எனது சோதிட தொழிலை எதிராளியை எதிர்நோக்கியே ஒட்டவேண்டும் என்பது விதி. இதில் என்னிடம் ஆலோசனை பெரும் பெரும்பாலானவர்கள் எனக்கு ஏமாற்றங்களை கொடுப்பார்கள். அதாவது நான் கூறும் ஆலோசனையை பின்பற்றுவதாக கூறி, பரிகாரம் செய்துகொள்வதாக கூறி, கடைசியில் எதையும் செய்யாமல் இருப்பார்கள். இதற்காக நான் அவர்கள் மேல் வருத்தம் கொள்ளாமல் இருக்கும் போது அதே ஜாதகர் சில மாதங்கள்/வருடங்கள் கழித்து என்னிடம் மீண்டும் ஆலோசனை பெறுவார். மீண்டும் நான் பரிகாரம் கூறுவேன், இந்த முறை நான் கூறியதை ஏற்று பரிகாரம் செய்துகொள்வார்.
காரணம் அவருக்கு ஏற்பட்ட அனுபவம், இதுவே நான் கோபபட்டால் அவ்வளவு தான். எனக்கு ஆலோசனை வழங்க ஜாதகர்களே இருக்க மாட்டார்கள். இவ்விதமே சனி நின்ற பாவத்தில் சோதனைகளை கொடுத்து அதனை ஜாதகர் ஏற்றுக்கொள்ளும்படி சனி நிர்பந்தம் செய்வார். ஏற்றால் உண்டு ஏற்றம், இல்லையேல் சோதனை அதிகமாகும். ராமனின் வாழ்விலும் அவ்விதமே நடைபெற்றது. தாய் சொல்லின்படி காட்டுக்கு சென்று திரும்பியவருக்கு ராஜாவாக பட்டாபிஷேகம் சனியால் வழங்கப்பட்டதே, ஆக சனி உன் கர்மங்களை கழித்து அதனை தாங்கிக்கொண்ட உனக்கு வெகுமானமும் கொடுப்பார். இதனால் தான் சனியை நடுநிலையாளர் என்கிறோம்.
Credit: Karthick Subramanyam