நமக்கு வர வேண்டியது நமக்கு வந்தே தீரும். யாரும் தடுக்க முடியாது.
நான் Five star hotel ஒன்றிற்கு உணவருந்த சென்றேன். Menu படித்து விட்டு உணவுக்கு ஆர்டர் கொடுத்தேன். சுமார் 20 நிமிடங்கள் கழித்து, ஆண்களும் பெண்களுமாக 10 பேர் நான் அமர்ந்திருந்த டேபிள் அருகே அமர்ந்தார்கள்.
தேவைக்கு order கொடுத்தார்கள். சிறிது நேரத்திலேயே உணவு வந்தது. கூச்சலும் கும்மாளமுமாக உணவு உண்டார்கள்.
எனக்கு இன்னும் உணவு வராததை கவனித்த ஒருவர் அதை கிண்டலாக குறிப்பிட்டார். தனக்கு அந்த ஹோட்டலில் எல்லோரையும் தெரியும். அதனால்தான் Quick and better service... no need to wait like beggar என்றார்.
என்னால் பொறுக்க முடியவில்லை. Order ஐ Cancel செய்து விட்டு புறப்படலாம் என்று waiterஐ கூப்பிட்டேன்.
Waiter அமைதியாக என்னிடம் கூறினார். Sir உங்களுடைய order very special எங்களுக்கு. அதை எங்கள் Chief Chef அவரே தயாரித்து கொண்டிருக்கிறார்.
அவர்களுக்கு தரப்பட்ட உணவு அவசரமாக, இங்கே பயிலும் மாணவர்களால் தயாரிக்கப்பட்டது. ஏனென்றால் உங்கள் உணவை எங்கள் தலைமை சமையல்காரர் தயாரித்து கொண்டிருக்கிறார். நான் அமைதி ஆனேன். பொறுமைகாத்தேன்.
சிறிது நேரத்தில் என் உணவு வந்தது. அதை 6 waiters எனக்கு பரிமானார்கள். Very rich food. நான் ஆர்டர் கொடுக்காதது. எனக்கு ஒன்றும் புரியவில்லை.
நான் ஹோட்டலில் நுழைந்த போதே அந்த ஹோட்டலின் அதிபர் என்னை பார்த்து விட்டார்.
அவர் என் பள்ளி நண்பர்.He wanted to surprise me.He changed my simple meal to a rich one and instructed the kitchen to give me a Royal treat.
பக்கத்து டேபிளில் இருந்தவர்கள் வாயடைத்து போய் விட்டார்கள். அவர்களால் பேசவே முடியவில்லை. தங்களுக்கு ஏன் அத்தகைய service கிடைக்கவில்லை? என்று தங்களுக்குள் வருத்தமாகப் பேசிக் கொண்டார்கள்.
அது தான் வாழ்க்கை.
சிலர் நம்மைப் பார்த்து நகைப்பார்கள். தாங்கள் சிறப்பானவர்கள் என்று குத்தி காட்டுவார்கள். கடவுள் தனக்கு செல்வமும் மகிழ்ச்சியும் கொடுத்திருக்கிறார் என்று நமது இயலாமையை சுட்டி காட்டுவார்கள்.
உங்களுக்குக் கூட வருத்தமாக இருக்கலாம். இவ்வளவு நாட்களாக உழைத்தும், பொறுமையாக இருந்ததற்கும் இன்னும் breakthrough வரவில்லையே என்று.
அந்த மன உளைச்சலால், ஏன் தற்கொலை செய்து கொள்ளக் கூடாது என்று அபத்தமான எண்ணங்கள் கூட வரலாம்.
Do not worry. The owner of the world, கடவுள் உங்களுக்கு நல்ல ஒரு உணவு தர வேண்டும் என்று உங்களை காக்க வைத்திருக்கலாம். அதை தயார் செய்ய சிறிது நேரம் ஆகும். அதை Chief Chef கடவுளால் மட்டுமே தயாரிக்க முடியும்.
பொறுமையாக நம் கடமைகளை சரிவர செய்து நாம் காத்திருந்துதான் ஆக வேண்டும். அந்த உணவு வரும் போது நம்மை கேலி செய்தவர்கள் வாயடைத்துப் போய் விடுவார்கள்.
நமக்கு வர வேண்டியது நமக்கு வந்தே தீரும். யாரும் தடுக்க முடியாது.